இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி எழும்பூர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், எனக்கு எதிராக ஆதாரமின்றி புகார் செய்துள்ளார். அந்த புகாரை கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார். பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்துள்ளார். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை அவதூறு சட்ட பிரிவின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் appeared first on Dinakaran.