திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ. உட்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம்: காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ. உட்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல்கள் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். கண்ணமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. அருள், தானிப்பாடி காவல் நிலைய தலைமை காவலர்கள் யூஜின் நிர்மல், சிவா , கீழ் கொடுங்கலூர் காவல் நிலைய தலைமை காவலர் ஹரி, செங்கம் காவல் நிலைய தலைமை காவலர் சோலை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

The post திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ. உட்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம்: காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: