இந்த கடைகளில் உள்ளூர் பழங்குடியினரின் கலை பொருட்கள், காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கோவில்பட்டி கடலை மிட்டாய், டீ தூள், மசாலா பொருட்கள் போன்ற உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளை அமைக்க விரும்புவோர் கைவினை கலைஞர் அல்லது கைத்தறி நெசவாளர் ஒன்றிய, மாநில அரசு தரப்பில் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். கடைகள் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர் ரயில் நிலையத்தில் கடைகளை அமைத்து 15 நாட்களுக்கு விற்பனை செய்யலாம். இதற்காக ஒரு சிறிய அளவு கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தெற்கு ரயில்வேயில் உள்ள 95 ஸ்டேஷனில் தமிழ்நாட்டிலேயே தயாரித்த உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் விற்பனை: ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.
