இதில் சென்னையை சேர்ந்த ரித்தீஷ் கலந்துகொண்டு மேஜிக் ஷோ நிகழ்ச்சி நடத்தினார். இதையடுத்து செவிலியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு ‘‘மதுவால் ஏற்படும் தீமைகள்’’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். மருத்துவமனையில் தொடக்க காலத்தில் இருந்து பணிபுரிந்துவரும் ஊழியர்களை பாராட்டி தங்க காயின் மற்றும் வெள்ளி காயின் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் அனில், இதயம் சம்பந்தமான மருத்துவர் பாஷா, குழந்தைகள் நல மருத்துவர் ஹேமச்சந்திரன், டாக்டர் வருண் காயத்ரி தேவி, நர்சிங் சூபர்வைசர் நிர்மலா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவமனை தலைமை அலுவலர் மூர்த்தி நன்றி கூறினார்.
The post திருத்தணியில் பீகாக் மருத்துவமனை 7ம் ஆண்டு விழா appeared first on Dinakaran.