திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடி வசூல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணம் எண்ணும் பணி காவடி மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் நடந்தது. சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவார பணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவார பணிக்குழு, பொதுமக்கள் பிரதிநிதிகள், அயல்பணி மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரூ.4 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 505 காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 2 கிலோ 910 கிராம், வெள்ளி 42 கிலோ 750 கிராம், பித்தளை 79 கிலோ, 977 வெளிநாட்டு பணமும் கிடைத்தது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடி வசூல் appeared first on Dinakaran.

Related Stories: