வீடுகளுக்கு நிலை கட்டணம் மீதான அபராதம் வசூலா? தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் வழங்கல் விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் வீடுகளுக்கு நிலைக்கட்டணம் மீதான அபராதம் விதிப்பது போன்ற தவறான தகவல்கள் சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. வீடுகளுக்கு நிலை கட்டணம் வசூலிப்பதிலிருந்து 10.9.2022 முதல் விலக்கு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நிலை கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்த பின்பு, நிலைக் கட்டணம் மீதான அபராதம் என்பது தவறான செய்தியாகும். மேற்கண்ட வரைவு விதிகளின் மீது பொதுமக்களின் கருத்துரைகளை சமர்ப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கருத்துரைகளை பரிசீலனை செய்து விதிகளின் மீது இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வீடுகளுக்கு நிலை கட்டணம் மீதான அபராதம் வசூலா? தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: