பேரூரில் ஓவிய கண்காட்சி

 

தொண்டாமுத்தூர்: கோவை சதாங்கா ஆர்ட் ஸ்டூடியோ சார்பில், மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சி பேரூர் வேளாளர் மண்டபத்தில் நடந்தது. சதாங்கா ஆர்ட் ஸ்டூடியோ சார்பில், 10 மாணவர்கள் வரைந்த, பல்வேறு வகையான, 55 ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

பேரூரில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடந்த கண்காட்சி துவக்க விழாவில், கல்லூரி பேராசிரியர் பிருந்தா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில், பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, கவுன்சிலர் ராதா, ஓவிய ஆசிரியர்கள் சுபராகிணி, மதுரபாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில், பொதுமக்கள் கலந்துகொண்டு ஓவியங்களை பார்த்து ரசித்தனர்.

The post பேரூரில் ஓவிய கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: