₹1 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்

 

தர்மபுரி, ஏப்.27: நல்லம்பள்ளி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.தொப்பூர் உம்மியம்பட்டி கிராமத்தில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ₹30.34 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உம்மியம்பட்டி அரசு பள்ளியில் வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம் கட்டுமான பணி, பழுதடைந்த சமையற்கூடத்தையும், ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதையும், தொப்பையாறு அணை அருகே காணிகர அள்ளியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ₹70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தடுப்புசுவர் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், ₹3.95 கோடி மதிப்பீட்டில் நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் கட்டும் பணியையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர் (நெடுஞ்சாலைத்துறை) ஜெய்சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், லோகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post ₹1 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: