எட்டியம்மன் கோயில் குளம் சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் நாலூர் ஊராட்சி எட்டியம்மன் கோவில் குளம் சமூக வளர்ச்சி நிதி ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜையை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம். எஸ். கே. ரமேஷ் ராஜ் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் ஊராட்சியில் எட்டியம்மன் கோயில் குளம் உள்ளது குளத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அக்கோரிக்கையை ஏற்று மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம். எஸ் .கே. ரமேஷ் ராஜ் சமூக வளர்ச்சி நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி சீரமைக்க பூமி பூஜையை நேற்று தொடக்கி வைத்தார் .

அவருடன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தமிழரசன், பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ரகு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறுவாக்கம் இந்திரா சங்கர், வன்னிப்பாக்கம் முரளி, துணைத்தலைவர் சுரேஷ் பாபு, பழவேற்காடு அசோகன், கன்னிமுத்து, திமுக ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் சங்கர், புருஷோத்தமன், உமாபதி ,குடியரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

The post எட்டியம்மன் கோயில் குளம் சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: