ஊத்துக்கோட்டை, பிப். 21: சூளைமேனி கிராமத்தில் சமுதாயக்கூடத்தில் இயங்காமல், தனியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள சூளைமேனி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், மஞ்சள் நீராட்டுவிழா போன்ற பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடத்த பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்குச்சென்று அங்குள்ள திருமண மண்டபங்களை நாட வேண்டியிருந்தது. அவ்வாறு நடத்த அதிகளவில் வாடகை கொடுக்கவேண்டியுள்ளது. எனவே சூளைமேனி பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்பெற்றனர்.