சைமா சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

திருப்பூர், செப்.22: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர் 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா எனப்படும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்தில் ஒரு தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள், 2 இணைச் செயலாளர் பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. தேர்தல் நடத்தி மட்டுமே 2022-25க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஒருதரப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த 10ம் தேதி கூடிய சைமாவின் அவசர செயற்குழுவில் வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

வருகிற 29ம் தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று (21ம் தேதி) முதல் ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் வேட்பு மனு வழங்கும் பணி தொடங்கியது. மனு தாக்கலுக்கு 23ம் தேதி வேட் புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 25ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டு, 26ம் தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 29ம் தேதி சைமா அலுவலகத்தில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories: