தோகைமலை, ஜூன் 25: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியின் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான ஆங்கிலம் பேச்சுத்திறன் வளர்த்தல் குறித்து பயிற்சிகள் நடந்தது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் தோகைமலை ஒன்றியத்தில் 2 மையங்களில் தனித்தனியே பயிற்சிகள் நடந்தது. இதில் 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 நாள் பயிற்சியும், கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சியும் நடந்தது.