அவிநாசி அரசு கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை

அவிநாசி,ஏப்.25: அவிநாசி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நளதம் தலைமையேற்று,  பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அதன் நன்மைகளைப் பற்றியும், சேமிப்பு பழக்கத்தை பற்றியும் கல்லூரியின் நிலைமை பற்றியும் விவரித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் ஹேமலதா வரவேற்றார். இயற்பியல் பேராசிரியர் பாலமுருகன் கல்லூரியின் குறைகளைப் பற்றியும் நிதி நிலைமைகள் பற்றியும் பேசினார். கல்லூரியின் தேவைகள், கல்லூரியின் வளர்ச்சிக்காக பணிகளைப் பற்றி பெற்றோரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. பெற்றோர்கள் இக்கல்லூரியில் முதுநிலைபட்டப் படிப்புகளை கொண்டுவரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். வணிகவியல் துறைத்தலைவர் செல்வதரங்கினி நன்றிகூறினார்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.