திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் எம்.எல்.ஏ. செல்வராஜ் திறந்து வைத்தார்

திருப்பூர், மார்ச் 12: ஆண்டுதோறும் கோடை காலத்தையொட்டி திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நீர்மோர் வழங்கப்படுகிறது. இதற்காக திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டுக்கு உட்பட்ட புஷ்பா நகரில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நீர்மோர் பந்தலை திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர திமுக பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.