ஆலந்தூர், பிப்.12: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன், புழுதிவாக்கம் ஷீலா நகர் 1 முதல் 5 தெருக்கள், அகத்தியர் தெரு, திருவள்ளுவர் தெரு, ராமகிருஷ்ணராஜ் நகர் மெயின் ரோடு, ராமலிங்கம் நகர் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம், ‘‘நான் வெற்றி பெற்றதும் இந்த பகுதிக்கு பேருந்து வசதி, தரமான சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் சுகாதார பணிகளை நிறைவேற்றி தருவேன். சித்தேரியை தூர்வாரி அழகுபடுத்த நடவடிக்கை எடுப்பேன்,’’ என ஜெ.கே.மணிகண்டன் வாக்குறுதி அளித்தார்.