மானாமதுரை, டிச.6: மானாமதுரை வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது அப்பன்பெருமாள் கோயில். இந்த கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் நடந்து வந்தன. பணிகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக யாகசாலைகள் பூஜைகள் துவங்கின. யாகசாலைகள் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி கோபுரங்களில் வேதமந்திரங்கள் முழங்க ஊற்றப்பட்டது.