கட்டிமேடு ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, டிச.4: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சி இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கட்டிமேடு கடைத்தெரு மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கடைத்தெருவில் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும் மாவட்ட உதவி திட்ட அலுவலர்பாலசுப்பிரமணியன் வட்டார வளமைய அலுவலர்முத்தண்ணா முன்னிலையிலும் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் மக்கள் எளிதில் அறியும் வண்ணம் பாடல். நாடகம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: