க.பரமத்தி, டிச. 4: க.பரமத்தி அருகே அஞ்சூர் கிராம சுற்று பகுதியில் சரியான அளவில் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில் பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறு அத்தியாவசிய தேவைகளுக்கும் குடிநீருக்காக ஆறு நீரை குக்கிராம பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய பகுதியில் அவ்வப்போது வரும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை, மாலை திடீர் மழை, பகலில் வெயில் உள்ளிட்டவைகளால் மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி வருவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் சரியான அளவில் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.