குளித்தலை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 5 பேர் கைது

குளித்தலை, டிச. 2: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் குமாரமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே காவிரி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற குளித்தலை போலீசார் குமாரமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட வை.புதூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகானந்தம் (21), பழனிச்சாமி (41), நடராஜ் (36), துளசி நாதன் (21), தர்மலிங்கம் (49) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஐயப்பன் என்கிற சின்னமுண்டு, முருகேசன் என்கிற பெரிய முண்டு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: