கரூர், ஏப்.20: கரூரில் குறுகிய சாலையிலுள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே திறந்த நிலையில் உள்ள வடிகாலால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் இருந்து ஐந்து ரோடு, நெரூர், புலியூர், சோமூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மார்க்கெட் வளாகத்தை ஒட்டியுள்ள உதவி பெறும் பள்ளியின் வழியாக அனைத்து பஸ்களும் சென்று வருகின்றனர். குறிப்பிட்ட தூரம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி இந்த பகுதியில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.