திருவாரூர், மார்ச் 25: மக்கள் விரோத அதிமுக அரசினை அகற்றிட அனைவரும் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும் வாக்கு சேகரித்து வரும் நிலையில் நேற்று தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி கிழக்கு ஒன்றியத்தில ஓகைப்பேரையூர், வடபாதி, கல்லடி கருணாவூர், வேம்பூர், வடகட்டளை, பழையனூர், கொத்தங்குடி, பாண்டுகுடி, தென்கோவனூர், தண்ணீர்குன்னம், சாத்தனூர், புனவாசல், வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம்,புள்ளமங்கலம், பாலகுறிச்சி, பூந்தோட்டம், ஆதிவிடங்கம், சித்திரையூர், சிக்கவெளி, கருப்பூர், சித்தன்னக்குடி, வேளூக்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விலைவாசி என்பது கடுமையாக உயர்ந்துள்ளது.