ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் (Shopian) மாவட்டத்தில் உள்ள அடர்ந்த பழத்தோட்டத்தில், கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 லஷ்கர்-இ-தைபா (LeT) பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழுமையாகச் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவரும் உள்ளூர் லஷ்கர்-இ-தைபா அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் அகமது கனி மற்றும் லத்தீஃப் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பழத்தோட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து வெளியேறும் வழிகளும் (Escape Routes) முற்றிலும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன
