கரூர், பிப். 24: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்து கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். மேலும், தொழிற்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டு கையேட்டினை மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட கல்லூரி தாளாளர் பெற்றுக் கொண்டார்.