ஜெர்மனி குருத்வாராவில் மோதல் 4 பேர் காயம்

லண்டன்: ஜெர்மனியின் மோயர்ஸ் நகரில் உள்ள குருத்வாராவில் நேற்று முன்தினம் பிற்பகல் நேரத்தில் அங்கு கூடியிருந்த இரண்டு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஒருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. மேலும் 3 பேர் உட்பட லேசான காயங்களுடன் தப்பினார்கள். சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக வந்த தகவலை அடுத்து அங்கு சிறப்பு படைகள் குவிக்கப்பட்டனர்.

Related Stories: