சென்னை: ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி; எடப்பாடி பழனிசாமி ஒரு வியாபாரி என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். மேலும் ‘ஜெயலலிதாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என அதிமுகவினர் நினைத்தனர்’ எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
