சென்னை: பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சந்தீப் மிட்டலை, DVAC-யின் தலைமை இயக்குநராக நியமித்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது. சந்தீப் மிட்டல் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட ஒருவரை இப்பதவிக்கு நியமிப்பது மக்களின் நலனுக்கு நல்லதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
