நித்திரவிளையில் கொடி அணிவகுப்பு

நித்திரவிளை, ஏப்.9: தமிழகத்தில் வரும் 23 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காஞ்சாம்புறம் முதல் தூத்தூர் மீனவ கிராமம் வரை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமை தாங்கினார். நித்திரவிளை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் ஊர்வலம் காஞ்சாம்புறம் பகுதியில் இருந்து புறப்பட்டு நித்திரவிளை, சின்னத்துறை வழியாக தூத்தூரை சென்றடைந்தது. இதில் தமிழக சட்டம் ஒழுங்கு போலீசார், மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: