சோழவந்தானில் அரசு பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான், ஏப். 9: சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தபப்ட்டன. இவற்றில் ஆவலுடன் பங்கேற்ற மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து போட்டிகளில் வென்றவர்களுக்கும், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தலைமை ஆசிரியை தீபா, பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: