கோடையை சமாளிக்க மரம் நடுதல் அவசியம்

ஏழாயிரம்பண்ணை, ஏப்.9: கோடையை சமாளிக்க மரம் நடுதல் அவசியம் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையும், வெட்டப்படும் மரங்களுமே வெப்பம் பன்மடங்கு எகிற காரணமாக இருக்கிறது. ஓரிடத்தின் தட்பவெப்பநிலையை அங்குள்ள மரங்களே நிர்ணயிக்கின்றன.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக மரங்களில் பெரும்பாலானவை அகற்றப்பட்டிருப்பது, வருங்காலத்தில் தென் மாவட்டங்களில் மழை குறைந்து, வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சத்தைத் தருகிறது. இதனை கருத்தில் கொண்டு வரும் நாட்களில் அதிகம் மரங்கள் வளர்த்தால் மட்டுமே இந்த வெப்பத்திலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: