பெட்டிக்கடையில் மது விற்ற முதியவர் கைது

மார்த்தாண்டம், ஏப். 9: மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன்(69). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று சோதனை செய்த போது 26 பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. உடனே நாகேந்திரனை கைது செய்து 26 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Related Stories: