பாகிஸ்தானில் தொடர் மழைக்கு 45 பேர் பலி

பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் கைபர்பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தின் பல மாவட்டங்களில் உள்ள வீடுகளின் கூரைகள், சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் சில வீடுகள் முழுவதும் இடிந்துள்ளன.

மொத்தம் 442 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 382 வீடுகள் பகுதியளவிலும், 60 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. தொடர் கனமழையில் சிக்கி 23 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்பட 45 பேர் பலியாகி விட்டனர். 45 ஆண்கள், 44 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உள்பட 105 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: