கோவை, பிப்.17: சூலூர் பிரிவு சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். கோவை அவினாசி சாலை சூலூர் பிரிவில் இருந்து குரும்பபாளையம் அருகே முத்து கவுண்டன் புதூர் வழியாக திருச்சி சாலையை சென்றடையலாம். இந்த சாலை, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருச்சி சாலையை இணைக்கும் மிக முக்கியமான சாலையாகவும் உள்ளது. இதனால், இந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். மேலும், சூலூர் பிரிவில் இருந்து குரும்பபாளையம் முத்து கவுண்டன் புதூர் வரை ஏராளமான ஆக்கிரமிப்புகளும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் உள்ளன.