தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்த தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி: திருச்சியில் நாளை (9ம் தேதி) திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது. தலைவர் சொன்ன பிறகு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம். ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 என்பதை, தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்த உடன் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி கொடுக்கப்படும் என்று தலைவர் கூறி உள்ளார்.
அந்த நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணத்தை முடித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். நான் கடந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டேன். தற்போது தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன்’ என கலகலப்பாக கூறினார்.
