சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ேபாராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்த செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
