கரூர், ஜன. 12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையின் போது, வெல்லத்தின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. எனவே, வெல்லம் தயாரிப்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், நொய்யல் போன்ற பகுதிகளில் ஆண்டுதோறும் வெல்லம் தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.