சென்னை: தமிழ்நாடு நிதித்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.3000 கோடி மதிப்பில் 7 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி, 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் 7.14 சதவீத பிணையப் பத்திரங்கள் 2035 மறுவெளியீடு ரூ.1000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 11ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
