புதுக்கோட்டை, டிச.24: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இ.பி.அலுவலகம் அருகே வசிப்பவர் ரமேஷ்கண்ணா. இவரது மனைவி பரமேஸ்வரி(26). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. திருமணத்தின்போது வரதட்சணையாக 15 பவுன் நகை, ஒரு பைக் மற்றும் சீர்வரிசைகளை பரமேஸ்வரி குடும்பத்தினர் செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் பரமேஸ்வரியிடம் வரதட்சணை கேட்டு ரமேஷ்கண்ணா, அவரின் தாய் திலகவதி, தந்தை, கருப்பையா மற்றும் அவரது அக்கா வரிஜா ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமேஸ்வரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரமேஷ்கண்ணா, திலகவதி, கருப்பையா, வாிஜா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.