கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திப்பம்பட்டி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி, டிச. 23: பொள்ளாச்சியில் அருகே திப்பம்பட்டியில் நேற்று நடந்த மாட்டு சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று சுமார் 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்ததால் சந்தை களை கட்டியது.

 மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி சந்தையில் மாடுகளை வாங்க, கேரள வியாபாரிகள் வருகை அதிகளவில் இருந்தது. இதனால், மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றதுடன் கூடுதல் விலைக்கு போனது இதில் ஒரு காளைமாடு ரூ.28 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.28 ஆயிரத்துக்கும், எருமைமாடு ரூ.33 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரத்துக்கும் விலை போனது என மாட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.