83 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

 

கோவை, ஜூன் 12: கோவை மாவட்டத்தில் 83 நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் இலவசமாக விவசாய பயன்பாட்டிற்கு எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலன் கருத்தி மண், வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்படும். சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு விவசாய நில மேம்பாட்டு பணிளுக்காக மண், வண்டல் மண் எடுக்க அனுமதி தரப்படும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

The post 83 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.