4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரைஇன்று முதல் முழு ஆண்டு தேர்வு துவக்கம்

ஈரோடு, ஏப். 18: ஈரோடு மாவட்டத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் முழு ஆண்டு தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இருப்பதால், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த மாதம் இறுதிக்குள்ளே முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு இன்று (18ம் தேதி) முதல் துவங்கி நடைபெற உள்ளது. இதில், 4, 6, 8ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 5, 7, 9ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு வருகிற 28ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. முதல் தேர்வாக தமிழ் பாட தேர்வும், அதன்பின் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், இறுதி தேர்வாக உடற்கல்வி தேர்வுடன் நிறைவு பெற உள்ளது. உடற்கல்வி தேர்வு மட்டும் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

The post 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை

இன்று முதல் முழு ஆண்டு தேர்வு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: