மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல்

 

ஈரோடு, ஜூலை6:ஈரோடு மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் சார்பில் துணை ஆணையர் சரவணக்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா சிறப்பு நிதி ரூ.15 ஆயிரத்தை அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும்,

குழுப் பணியாளர் அனைவருக்கும் ஈ.பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு உடனே ஓய்வூதியம், பணிக்கொடையை உடனே வழங்க வேண்டும், அரசாணையின்படி, அகவிலைபடி உயர்வை உடனே வழங்க வேண்டும், நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும், 2014க்கு பிறகு, 290க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: