மது விற்ற 5 பெண்கள் உட்பட 21 பேர் கைது

 

ஈரோடு, ஜூலை 8: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் தடை செயயப்பட்ட குட்கா, புகையிலை விற்பனையை தடுக்க மது விலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து மேற்கொண்டிருந்தனர். இதில், டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக வெள்ளித்திருப்பூரில் விஸ்வநாதன் (62),

அந்தியூரில் ஆண்டியப்பன் (64), அய்யசாமி (42), சிறுவலூரில் சிவகுமார் (37), அம்மாபேட்டையில் சவுந்தர் என்ற சசி (31), சித்தோட்டில் குமாரசாமி (27), ஈரோடு கனிராவுத்தர்குளத்தில் மணிகண்டன் (42), மொடக்குறிச்சியில் மனோஜ்குமார் (22), பெருந்துறையில் விக்னேஷ் (26), ஆசனூரில் ஆறுமுகம் (50), கோபியில் பாலகிருஷ்ணன் (60), பவானியில் கணேஷ் (70) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 82 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 5 பெண்கள் உட்பட 21 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: