ஈரோடு, ஜூலை 8: மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.37 லட்சத்துக்கு எள் விற்பனையானது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 412 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.93.89க்கும், அதிகபட்சமாக ரூ. 145.69க்கும், சராசரி விலையாக ரூ.119.79க்கும் விற்பனையானது.
இதேபோல, சிவப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.86.91க்கும், அதிகபட்சமாக ரூ.126.19க்கும், சராசரி விலையாக ரூ.106.55க்கும் விற்பனையானது. வெள்ளை ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.92.89க்கும், அதிகபட்சமாக ரூ. 141.80க்கும், சராசரி விலையாக ரூ.117.88க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 488 கிலோ எடையிலான எள் ரூ.37 லட்சத்து 12 ஆயிரத்து 770க்கு விற்பனையானதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
The post ரூ.37 லட்சத்துக்கு எள் விற்பனை appeared first on Dinakaran.