தோப்பில் 800 கிலோ பாக்கு திருடிய 2 பேர் கைது

 

மேட்டுப்பாளையம், நவ.15: கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் சாலையில் அத்தி மரத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகரத்தினம் (63). இவருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம்-வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் பொகளூர் தோட்டம் என்ற பெயரில் 10 ஏக்கர் பாக்கு தோப்பு உள்ளது. இந்த நிலையில் இவரது பாக்கு தோப்பில் அவ்வப்போது பாக்குகள் திருடு போய் இருந்துள்ளன. இதனையடுத்து பாக்குத்தோப்பை கண்காணிக்கும்படி வேலைக்கு வரும் அர்ஜுன் (38) என்பவரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி பாக்குத்தோப்பில் பாக்கு மரங்களில் இருந்து பறிக்கப்பட்ட பாக்குகளை உரித்தும், வெட்டியும் வைத்திருந்த பாக்குகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். விசாரித்தபோது பாக்கு தோப்பிற்கு வேலைக்கு வரும் வெல்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் மற்றும் அவரது நண்பர் கூடுதுறை மலையைச்சேர்ந்த சரவணன் (31) உள்ளிட்ட இருவரும் 800 கிலோ பாக்குகள் திருடியது தெரியவந்தது. இது குறித்து பாக்கு தோப்பு உரிமையாளர் கனகரத்தினம் நேற்று கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post தோப்பில் 800 கிலோ பாக்கு திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.