2 பாக். டிரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

ஜலந்தர்: பஞ்சாப் சர்வதேச எல்லையில் இருந்து 2 டிரோன்களை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் தார்வால் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சர்வதேச எல்லைப்பகுதியை கடந்து இந்தியாவிற்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று நுழைய முயன்றது. இதனை கண்டு உஷாரான எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள். இதனை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்தில் இதே மாவட்டத்தின் ரத்தன் குர்த் கிராமத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து நுழைய முயன்ற டிரோனையும் வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். இரண்டாவது டிரோனில் இருந்து 2.6கிலோ ஹெராயின் இணைக்கப்பட்டு இருந்தது. இதனை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

The post 2 பாக். டிரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை appeared first on Dinakaran.

Related Stories: