கரூர், மார்ச் 20: கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க ஏமூர் நடுப்பாளையத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரனோ வைரஸ் பீதி காரணமாக தமிழகம் முழுதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ம்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாணவ, மாணவிகளும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் ஏமூர் நடுப்பாளையத்தில் நூலக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் பூட்டிய நிலையில்தான் இருந்தது. தற்போது சில மாதங்களாக இந்த கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.