தோகைமலை, மார்ச் 18: தோகைமலை அருகே விறகு அடுப்பில் சமைத்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலியானார். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காட்டுபட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் சிறும்பாயி அம்மாள் (75). இவர் தனது வீட்டில் சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணயை ஊற்றி அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறும்பாயி அம்மாள் சேலையில் தீ பற்றி பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.