செல்லாண்டிபாளையத்தில் பாசன வாய்க்காலில் கழிவுகள் கொட்டுவதால் கொசு தொல்லை

கரூர், டிச. 4: வாய்க்காலில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் செல்லாணடிபாளையத்தில் அமராவதி பாசன வாய்க்கால் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருகிறது. குப்பைகள் வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ளது. குப்பைகள் அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீரும் நிலத்தடி நீராக மாறாத நிலை உள்ளது. துர் நாற்றத்தினால் சுகாதாரகேடு, கொசுத்தொல்லை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: