திருச்சி: தீபாவளி என்றாலே இனிப்புதான் நம் நினைவுக்கும் வரும். இனிப்பு மற்றும் கார பலகாரம் இல்லாத தீபாவளியை எப்படி நம்மால் நினைத்துப் பாக்க முடியாதோ அதுபோல தான் இனிப்பு என்றதும் அஸ்வின்ஸ் நிறுவனமும், நம் நினைவிற்கு வருவதை நாம் தவிர்க்க முடியாது. அதனால் தீபாவளிக்காக அஸ்வின்ஸ் தலைவர் கே.ஆர்.வி.கணேசனை சந்தித்தோம். இன் முகத்துடன் இருகரம் கூப்பி வரவேற்று தீபாவளி வாழ்த்து கூறிவிட்டு தீபாவளி பற்றி பேசினார். தீபாவளிப் பண்டிகை நம் தீய மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஒழித்து நல்ல மற்றும் நேர்மறை எண்ணங்களை தூண்ட கொண்டாடப்படுகிறது. இதன் பாரம்பரியமாக அதிகாலை எண்ணெய் தேய்ததுக் குளித்து நம் உடல் பிரச்னைகளைக் களைந்து கடவுளை கும்பிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து இனிப்பு உண்டு கொண்டாடுகிறோம்.இனிப்புகளை நாம் மட்டும் உண்ணாமல் நமது உறவினர்களுக்கும் நட்புகளுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் பகிர்ந்து நம் நல்லுறவு மற்றும் வாழ்த்துக்களை பகிர்வது மேலான பண்பாடு. அத்தகைய மேலான பண்பாடான இனிப்புகளை நாங்கள் அஸ்வின்ஸ் நிறுவனத்தில் பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நமது பாரம்பரிய பலகாரங்களான அதிரசம், தட்டை, மிக்சர், தேன்குழல் முறுக்கு, அச்சு முறுக்கு, கைமுறுக்கு, இனிப்புசீடை, சோமாசி, நெய்உருண்டை, பொறிவிளங்கா உருண்டை, பாதாம் அல்வா, குளோப்ஜாமூன், தீபாவளி - லேகியம் போன்றவை அஸ்வின்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிகம் விரும்பப்படும் தயாரிப்புகளாகும்.