குளித்தலை, செப். 17: குளித்தலை பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சுமார் 5000 ஏக்கர் அளவிற்கு பயிரிட்டு வந்தனர். கடந்த 5 வருடமாக பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் விவசாயிகள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் காவிரியில் கிடைத்த நீரைக்கொண்டு ஓரளவே பயிரிட நேரிட்டது. விவசாயிகள் இந்த வருடமாவது மழை பெய்யுமா என்று ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தனர்.